முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளர் தொடர்பில் பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப விசாரணை செய்யுமாறு வடமாகாண பிரதமர் செயலாளருக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பொதுச்சேவை ஆணைக்குழு, கல்விச்சேவை ஆணைக்குழுவுக்கு பாரப்படுத்திய நிலையில், இம்முறைப்பாட்டை ஆராய்ந்த கல்விச்சேவை ஆணைக்குழு வலுவில் உள்ள சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக வடமாகாண பிரதம செயலாளருக்கு பாரப்படுத்தியுள்ளது.