இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!

இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!

editor 2

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில், இரண்டாம் தவணை நிறைவடைவது தொடர்பாக கல்வி அமைச்சினால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

2024ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான இரண்டாம் பாடசாலைத் தவணை எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை மூன்றாம் பாடசாலைத் தவணைக்கான முதல் கட்டம் 26.08.2024 திங்கட்கிழமை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Share This Article