யாழ் – சேந்தாங்குளம் பகுதியில் 3 படகுகள் தீக்கிரை!

யாழ் - சேந்தாங்குளம் பகுதியில் 3 படகுகள் தீக்கிரை!

editor 2

யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது 03 படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. 

சேந்தாங்குளம் கடற்கரையில் நேற்றிரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது சில வாடிகளும் தீக்கிரையாகியுள்ளதுடன், பொதுமக்கள் தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படாத நிலையில் இளவாலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article