ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மூன்றாவது மீளாய்வுக் கூட்டம் – IMF!

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மூன்றாவது மீளாய்வுக் கூட்டம் - IMF!

editor 2

இலங்கை அரசாங்கத்துடன், விரிவான நிதி வசதித்திட்டம் தொடர்பான மூன்றாவது மீளாய்வுக் காலம் குறித்து கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுவர் பீற்றர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், இலங்கை அரசாங்கத்துடன், விரிவான நிதி வசதித்திட்டம் தொடர்பான மூன்றாவது மீளாய்வு காலம் குறித்து கலந்துரையாடவுள்ளதாக அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதி வசதித் திட்டத்தின் கீழ்,

இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின்படி, அதன் சிரேஷ்ட செயற்பாட்டுத் தலைவர் பீற்றர் ப்ரூவர் உள்ளிட்ட குழுவினர், கடந்த 25 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்து, பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார மற்றும் நிதி அறிமுகம் குறித்து கலந்துரையாடினர்.

இலங்கை அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தொடர்ச்சியான மூன்று காலாண்டு வளர்ச்சி, குறைந்த பண வீக்கம், வருவாய் சேகரிப்பில் வளர்ச்சி மற்றும் வெளி கையிருப்புகளை கட்டியெழுப்புதல் ஆகியவற்றுடன், மீட்சிக்கு உதவிய விடயங்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

போக்குவரத்து இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது 2025 இல் வருவாயை வலுப்படுத்த உதவும் என அறிக்கையிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2025 ஏப்ரல் மாதத்துக்குள், ஏற்றுமதியாளர்களுக்கு வற் வரியை திரும்பப் பெறும் முறையை நிறுவுதல் உள்ளிட்ட வரி நிர்வாக சீர்திருத்தங்கள் மூலம், நிலைமையை மேலும் மேம்படுத்த முடியும் என சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This Article