மட்டக்களப்பில் வாய்க்காலில் இருந்து முதியவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பில் வாய்க்காலில் இருந்து முதியவரின் சடலம் மீட்பு!

Editor 1

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று விவேகானந்தபுரம் ஆயிரம்கால் மண்டப வீதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரம்கால் மண்டப வீதியில் உள்ள வாய்க்காலில் சடலம் ஒன்று கிடப்பதாக பொதுமக்களினால் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து குறித்து இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் சடலத்தை பார்வையிட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வெல்லாவெளி விவேகானந்தபுரத்தை சேர்ந்த 64 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article