யாழ்ப்பாணம் – செம்மணி சந்தியில், உந்துருளியுடன் பட்டா ரக வாகனம் மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தில் உந்துருளியில் பயணித்த இருவரே படுகாயமடைந்துள்ள நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் – பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.