கிளிநொச்சியின் பிரதேச சபைகளின் தலைவர்கள் தெரிவு!

கிளிநொச்சியின் பிரதேச சபைகளின் தலைவர்கள் தெரிவு!

editor 2

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களிலும் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஆட்சியமைக்கவுள்ள நிலையில், அந்த மூன்று சபைகளுக்குமான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு நேற்று முன்தினம் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பணிமனையில் நடைபெற்றுள்ளது.

மூன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கும், தமிழ் அரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை
நிர்வாக உறுப்பினர்களுக்குமிடையே நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தெரிவுகள் இறுதிசெய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய கரைச்சி பிரதேச சபையின் தவிசாளராக அருணாசலம் வேழமாலிகிதனும் உப தவிசாளராக புஸ்பநாதன் சிவகுமாரும், பூநகரி பிரதேச சபையின் தவிசாளராக சிவகுமாரன் சிறீ ரஞ்சனும் உப தவிசாளராக திருமதி குணலக்சுமி குலவீரசிங்கமும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சுப்பிரமணியம் சுரேனும், உப தவிசாளராக சிவகுரு செல்வராசாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தெரிவுகள் தொடர்பிலான மாவட்டக் கிளையின் எழுத்துமூல தீர்மானம், கிளிநொச்சி மாவட்டக் கிளைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனால் கட்சியின் பதில் தலைவரிடம் நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article