தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு என்ற ஒரு பிரச்சினை இல்லை எனக் காண்பிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முயல்வதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராச மாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களில் பெரும்பாலானோர் வடக்கு கிழக்கிலேயே பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதற வைப்பதற்கு முயற்சிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.