யாழ்ப்பாணம், தையிட்டி – திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் அந்த பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நேற்றைய தினமும் அங்கு போராட்டம் நடைபெற்றது.
இன்று காலை முதல் காணி உரிமையாளர்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அதேநேரம், பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் பொலிஸ் கலகத்தடுப்பு பிரிவினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பலாலி – தையிட்டி விகாரையை அண்மித்த பகுதிகளில் நாளை வரை சட்டவிரோத ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு சில தரப்பினருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.







