மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணியில் பௌர்ணமி தினமான இன்று (10) கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை (10) பிற்பகல் கைது செய்துள்ளனர்.
அத்துடன் 100 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் 44 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவருக்கு எதிராக பொசன் பூரண தினத்தில் கசிப்பு உற்பத்தி மற்றும் சட்டவிரோதமான கசிப்பு உற்பத்தி ஆகிய குற்றங்களின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அந்த பெண்ணை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
