மன்னார் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க கூறிய கருத்துகள் தொடர்பில் விசாரிப்பதற்காக நாளை மறுதினம் திங்கட்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளதாகத் தெரியவருகிறது.
நேற்றுமுன்தினம் மன்னாரில் பிரசார
கூட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தேசிய மக்கள் சக்தி
ஆட்சியமைக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கே விசேட நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற ரீதியில் கருத்து வெளியிட்டிருந்தார்.
அவரின் இந்த கருத்துகள் தொடர்பில்தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்
பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலை யில், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து விசாரணை நடத்துவதற்காகவே நாளைமறுதினம் தேர்தல்கள்
ஆணைக் குழு கூடவுள்ளதாக அறிய வருகிறது.