மாணவர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டை வழங்க நடவடிக்கை!

மாணவர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டை வழங்க நடவடிக்கை!

editor 2

2026 ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள மாணவர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு
அறிவித்துள்ளது.

பாடசாலை நிர்வாகத்தை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த அமைப்பில், அடுத்த ஆண்டு ஒவ்வொரு மாணவருக்கும் விரிவான டிஜிற்றல் பதிவுகள் இருக்கும்.

ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களின் பிறப்புச் சான்றிதழ், பரீட்சை முடிவுகள், திறன்கள் அடங்கிய தனிப்பட்ட தரவு கோப்பு, தனித்துவமான அடையாள அட்டையுடன் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article