கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள 5 மாடி கட்டடமொன்றில் இருந்து தவறி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்தார்.
யன்னல் கண்ணாடிகளை சுத்தம் செய்யும் போது தவறி விழுந்து உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மட்டக்களப்பைச் சேர்ந்த 59 வயதுடைய ஆணொருவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.