‘உங்களின் பதவிகளுக்காக தமிழ் மக்களை விற்காதீர்கள்’, – இவ்வாறு கூறியுள்ளார் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி.
நேற்று யாழ். ஊடக அமையத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், ‘தந்தை செல்வா, ஜீ. ஜீ. பொன்னம்பலம், தொண்டமான் உள்ளிட்டவர்கள் உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி இன்றும் இருக்கிறது. தமிழர் விடுதலைக் கூட்டணியும் நானும் உயிரோடு இருக்கிறோம். தந்தை செல்வா காட்டிய தமிழர் விடுதலை கூட்டணியின் வழியில் மக்கள் அனைவரும் ஒன்று சேரவேண்டும்.
நான் அரசியலில் இருந்து ஒதுங்கத்தயார். இலங்கை தமிழ் அரசு கட்சியினர் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து வெற்றிகரமாக செயல்பட ஒத்துழைப்பதே தந்தை செல்வாவுக்கு நீங்கள் செய்யக்கூடிய மரியாதை –
என்றும் அவர் கூறினார்.