வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்பகுதியில் நேற்றுக் காலை தாக்குதலுக்கு இலக்கான நபர், மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வத்திராயன் பகுதியை சேர்ந்த மத்தியாஸ் வின்சன் பெனடிக்ட் என்பவரின் வலைகள், கடலில் அறுத்தெறியப்பட்டவேளை, இன்னொரு படகில் வந்த நபர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன்போது, வின்சன் பெனடிக்ட் என்பவரின் படகை, மற்றைய படகால் மூன்று தடவைகள் மோதி மூழ்கடிக்க முனைந்தார்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
படகில் இருந்து காயங்களுடன் தூக்கி எறியப்பட்ட வின்சன் பெனடிக்ட், கடலில் மூழ்கி உயிருக்கு போராடிய நிலையில், அவருடன் தொழிலுக்குச் சென்ற மீனவரால் காப்பாற்றப்பட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இவரை, வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத் தலைவர் பார்வையிட்டுள்ளார்.
இந்த நிலையில், மருதங்கேணி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.