ஊழல் மோசடியுடன் தொடர்புடைய முக்கிய அரசியல்வாதி ஒருவர் இன்னும் இரண்டு வாரங்களில் சிறைக்குச் செல்வார் என்று, பெருந்தோட்ட மற்றும் சமூக
உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தவர்களுக்கும் மக்களின் பணத்தை கொள்ளை அடித்தவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊழல் மோசடிகளுடன் சம்பந்தப்பட்ட பலர் உள்ளனர். அவர்களை
விரைவில் சிறைக்கு அனுப்ப நாம் நடவடிக்கை எடுப்போம் – என்று இணையத்தளம் ஒன் றுக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறியுள்ளார்.