இணைய வழி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது!

இணைய வழி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது!

editor 2

இணைய வழியினூடாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவரை வடமேல் மாகாண பொலிஸ் கணினி குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளனர். 

சந்தேகநபர்கள் இருவரும் சமூக ஊடகங்களில் நடத்திச்சென்ற குழுக்களைப் பயன்படுத்தி இவ்வாறு நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் 24 மற்றும் 26 வயதுகளையுடைய பொக்காவல, வெலிகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சந்தேகநபர்களில் ஒருவர் 12 இலட்சத்து 6,220 ரூபாய் நிதி மோசடி செய்துள்ளதுடன், மற்றைய நபர் 780,500 ரூபாவை மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

Share This Article