நிறைவுகாண் மருத்துவ நிபுணர்களின் போராட்டம் நிறைவுக்கு!

நிறைவுகாண் மருத்துவ நிபுணர்களின் போராட்டம் நிறைவுக்கு!

editor 2

நிறைவுகாண் மருத்துவ நிபுணர்களின் 5 தொழிற்சங்கங்கள் இணைந்து ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8 மணியுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. 

எனினும், மருத்துவ இரசாயனவியலாளர்கள் தொழிற்சங்கங்கள் மாத்திரம் தொடர்ந்து அந்தப் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதாக நிறைவுகாண் மருத்துவ தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். 

நேற்று பிற்பகல் கூடிய நிறைவுகாண் மருத்துவ நிபுணர் தொழிற்சங்கங்கள் ஒன்றியத்தின் குழுக்கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. 

குறித்த கூட்டத்தை அடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக நிறைவுகாண் மருத்துவத் தொழிற்சங்கங்கள் ஒன்றிய செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். 

கடந்த இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இந்த பணிப்புறக்கணிப்பினால் கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை உள்ளிட்ட பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக வந்திருந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிருந்ததாக வைத்தியசாலைகளில் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

Share This Article