வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; 132 பேர் கைது!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; 132 பேர் கைது!

editor 2

வெளிநாடுகளுக்கு செல்வதற்காக சட்டவிரோத நிறுவனங்களுக்கு பணம் செலுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் இது தொடர்பில் 132
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் மோசடி செய்பவர்களுக்கு பணம் கொடுக்கும் சம்பவங்களில் 27 வீதம் அதிகரிப்பு
காணப்படுவதாக குறித்த பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி
செனரத் யாப்பா தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டில், வெளிநாடுகளுக்கு செல்வதற்காக சட்டவிரோத நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவது தொடர்பாக 3675 முறைப்பாடுகள்
கிடைக்கப்பெற்ற நிலையில், இது 2024 ஆம் ஆண்டில் 4658 முறைப்பாடுகளாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, 2024 ஆம் ஆண்டில் குறித்த மோசடிகள் தொடர்பில் 132 பேர் கைது
செய்யப்பட்டதாகவும் மேலும், உரிமம் பெற்ற 14 நிறுவனங்களின் உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டில், 15 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டு 132 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன், உரிமம் பெற்ற 14 நிறுவனங்களின் உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதற்காக, 2024 ஆம் ஆண்டில் 900 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டில் 182 வழக்குகள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டன – என்றார்.

Share This Article