வாழைச்சேனையில் குழு மோதல்! எண்மர் வைத்தியசாலையில் அனுமதி!

வாழைச்சேனையில் குழு மோதல்! எண்மர் வைத்தியசாலையில் அனுமதி!

editor 2

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக எட்டுப் பேர் மருத்துவ
மனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை செம்மண்ணோடைப் பகுதியில் இடம்பெற்றதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த இரு குழுக்களையும் சேர்ந்த எட்டுப்பேர் வாழைச்சேனை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர்
அதில் நான்கு பேர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இரு குழுக்களிலும் சுமார் முப்பதுக்கும் மேற்பட்டோர் இந்த தகராறு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

Share This Article