முன்னயை ஆட்சிக் காலத்தில் ஊழல் மோசடி தொடர்பாக 11 வழக்குகளில் 4 வழக்குகள் உடனடி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் கொழும்பு ஊடகம் ஒன்று பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை வெளியான அந்த வார ஏட்டின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மோசடி, ஊழல், கொலை மற்றும் சட்டவிரோத சொத்துக் குவிப்பு உள்ளிட்ட பாரதூரமான குற்றங்கள் தொடர்பான
11 வழக்குகள் தொடர்பாகவும் அதற்கு தேவையான கோப்புக்களை சட்டமா அதிபருக்கு காவல்துறை அனுப்பி வைத்துள்ளது.
இந்த வழக்குகளில் பல மூத்த அரசியல்வாதிகள் மற்றும் முன்னைய ஆட்சிக் காலத்தின் மூத்த அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த கோப்புக்களில் நான்கு வழக்குகளுக்கு முழு ஆதாரங்களுடன் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார்.
சட்டவிரோதமாக சொத்துக் குவிப்பு உள்ளிட்ட மோசடி மற்றும் ஊழல் தொடர்பான 4 கோப்புக்கள் வழக்கு விசாரணைக்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஏனைய மூன்று வழக்குகள் தொடர்பிலும் மேலதிக சாட்சியங் களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் விசாரணைகளை துரிதமாக முடிக்கு கொண்டுவருமாறு சட்டமா அதிபர் திணைக்களம் காவல்துறைக்கு
பணிப்புரை விடுத்துள்ளது.
சட்டமா அதிபர் சட்டத்தரணி பரிந்தரணசிங்க மற்றும் மேலதிக சிரேஷ்ட சொலிசிட்டர் ஜெனரல் அரச தலைவரின் சட்டத்தரணி ரொஹந்த அபேசூரிய
தலைமையிலான சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்த தேவையான பணிகளை மேற்கொண்டு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.