கட்சி மாறுவதற்கோ விலை போவதற்கோ தயாராக இல்லை – இராதாகிருஷ்ணன்!

கட்சி மாறுவதற்கோ விலை போவதற்கோ தயாராக இல்லை - இராதாகிருஷ்ணன்!

editor 2

எந்தக் காரணம் கொண்டும் கட்சி மாறுவதற்கோ விலை போவதற்கோ தயாராக இல்லை எனவும், சஜித் பிரேமதாசவுடனே நாம் என்றும் பயணிப்போம் எனவும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து மஸ்கெலியா நகரில் மலையக மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2019ம் ஆண்டு ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஆரம்பிப்பதற்கு மலையக மக்கள் முன்னணியும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் முன்நின்று செயற்பட்டன.

இதனால் தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து யாரோ ஒருவர் பணத்திற்காக விலை போனதால், நானும் அவ்வாறு கட்சியிலிருந்து வெளியேறி செல்வேன் என சொல்வது கேலிக் கூத்தான விடயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article