அதிகரிகும் வெப்பநிலையால் தோல் நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம்!

அதிகரிகும் வெப்பநிலையால் தோல் நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம்!

editor 2

நாட்டில் தற்போது அதிகரித்து வரும் வெப்பநிலையால் தோல் நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் அதிகம் காணப்படுவதாக வைத்திய நிபுணர்கள்
தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவிக்கையில் –

நாடு முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலையினால் குழந்தைகளிடையே தோல் நோய் பிரச்னைகள் மிகவும் பொதுவான ஒன்றாக உள்ளது.

அதிகரிக்கும் வெப்பநிலையினால் தோல் நோய்கள் ஏற்படுவதோடு, உடலில் நீர்ச்சத்து குறைபாடு அதிகரிக்கும் என்றும் அதிக சூரிய ஒளி படும் இடங்களில் இருப்பதை தவிர்ப்பதோடு, அதிகளவு தண்ணீர் பருகவேண்டும்.

மேலும், செயற்கையான குளிர் பானங்களை அருந்துவதை தவிர்த்து இயற்கையான தண்ணீர், எலுமிச்சை சாறு, இளநீர் போன்றவற்றை பருகவேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஒரு நாளைக்கு இரண்டுமுறை குளிப்பாட்டவேண்டும்- என்றார்.

Share This Article