இலங்கை கடற்படையின் புதிய பிரதம அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட!

இலங்கை கடற்படையின் புதிய பிரதம அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட!

editor 2

ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட இலங்கை கடற்படையின் புதிய பிரதம அதிகாரியாக முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

2024 ஆகஸ்ட் 16ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவரது நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை (26) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் கடற்படை தலைமையகத்தில் அது தொடர்பான நியமனம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க இப்பதவியை வகித்து வந்தார்.

Share This Article