மூன்றாம் தவணைக்கான பாடசாலையின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!

மூன்றாம் தவணைக்கான பாடசாலையின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!

editor 2

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான பாடசாலையின் முதல் கட்டம் நாளைத் திங்கட்கிழமை ஆரம்பமாகும் எனக் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கடந்த 16ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்திருந்தது.

இந்த நிலையில், மூன்றாம் தவணைக்கான முதல் கட்ட கல்விச் செயற்பாடுகள் நாளை முதல் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளின் பெற்றோருக்கு விசேட அறிவுறுத்தலொன்றும் வழங்கப்பட்டுள்ளது.

மழையுடனான காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாகப் பல நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

அதன்படி வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விடுமுறைக் காலம் முடிந்து பிள்ளைகள் பாடசாலைக்குத் திரும்ப உள்ள நிலையில் உரியச் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியமாகும் எனச் சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share This Article