அரியாலை (செம்மணியின் தொடர் நிலப்பகுதி) மனித புதைகுழியில் நேற்று வியாழக்கிழமை வரை 18 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் கண்டறியப்பட்ட மனித புதைகுழியில் இரண்டாம் கட்டமாக 04ஆவது நாளாக நேற்றும் அகழ்வு
பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, மேலும் 5 எலும்புக்கூட்டு தொகுதிகள் கண்டறியப்பட்டிருந்தன.
இதனிடையே, இதனை மனித புதைகுழியாக அறிவிக்கக் கோரி தாக்கல்
செய்யப்பட்ட வழக்கில் இன்றைய தினம் நீதிவான் கட்டளை பிறப்பிக்கவுள்ளார்.
முன்னதாக, மூன்றுக்கு மேற்பட்ட எலும்புக்கூட்டு தொகுதிகள் கண்டறியப்பட்டமையால் இதனை மனித புதைகுழியாக அறிவிக்கக் கோரி
சட்டத்தரணி வி. எஸ். நிரஞ்சன் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பான ஆதாரங்கள் – அறிக்கைகளை வெள்ளிக்கிழமை (இன்று) சமர்ப்பிக்குமாறு நீதிவான் ஏ. ஆனந்தராஜா உத்தரவிட்டிருந்தார். இதன்படி, இன்றைய தினம் மனித புதைகுழியாக அறிவிப்பது தொடர்பில் கட்டளை பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.