ஆற்றினுள் வீழ்ந்த மோட்டார் சைக்கிள்- மட்டக்களப்பில் ஒருவர் மரணம்!

ஆற்றினுள் வீழ்ந்த மோட்டார் சைக்கிள்- மட்டக்களப்பில் ஒருவர் மரணம்!

editor 2

மட்டக்களப்பு மாவட்டம்களுவாஞ்சிக்குடி, பழுகாமம் – பெரியபோரதீவு பிரதான வீதியில் உள்ள ஆத்துக்கட்டு பாலத்தினூடாகப் பயணித்த உந்துருளியொன்று ஆற்றுக்குள் வீழ்ந்ததில் அதனைச் செலுத்தியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

03 பேர் பயணித்த குறித்த உந்துருளியை பாலத்தின் மீது நிறுத்த முற்பட்டபோது, அது கட்டுப்பாட்டை மீறி ஆற்றுக்குள் வீழ்ந்துள்ளது.

இதன்போது, உந்துருளியை செலுத்தியவர் நீரில் மூழ்கிக் காணாமல் போயிருந்த நிலையில், பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.

பழுகாமம் – பட்டாரபுரத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் உந்துருளியில் பயணித்த ஏனைய இருவரையும் கைது செய்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share This Article