இந்திய மீனவர்கள் 11 பேருக்கு விளக்கமறியல்!

இந்திய மீனவர்கள் 11 பேருக்கு விளக்கமறியல்!

editor 2

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடிபட்டதற்காக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, இந்திய மீனவர்கள் 11 பேரையும் எதிர்வரும் செப்டெம்பர் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இலங்கை வடக்கு பருத்தித்துறை கடல் பகுதியில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டிணத்தை சேர்ந்த இந்த 11 பேர் கைது செய்யப்பட்டதோடு, அவர்கள் பயணித்த விசைப் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த சில மாதங்களாக தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

அத்துடன் அண்மைக்காலத்தில் இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையின்போது ஒரு இலங்கை கடற்படை உறுப்பினரும், இரண்டு இந்திய கடற்றொழிலாளர்களும் பலியான சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

Share This Article