நாகர்கோவில் கடற்பரப்பில் 100 அடி ஆழத்தில் மீனவர் மரணம்!

நாகர்கோவில் கடற்பரப்பில் 100 அடி ஆழத்தில் மீனவர் மரணம்!

editor 2

கடலில் சுமார் 100 அடி ஆழத்தில் ஒட்சிசன் சிலிண்டரை பயன்படுத்தி மீன்பிடித்த
மீனவர் நெஞ்சுவலியால் உயிரிழந்தார்.

நாகர்கோவில் கடற்பரப்பில் நேற்றுமுன்தினம் மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில், புத்தளம் – கற்பிட்டியை சேர்ந்த சேகுலாப்தீன் முஹமட் காபில் (வயது 40) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

கரையிலிருந்து 24 கிலோமீற்றர் தூரத்தில் சுமார் 100 அடி ஆழத்தில் குறித்த மீனவர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை மீட்ட சக மீனவர்கள் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக
அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலை
யில், நேற்றுமுன்தினம் மாலை அவர் அங்கு உயிரிழந்தார்.

அவரின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை
அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Share This Article