நாட்டில் 1200 பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள்!

நாட்டில் 1200 பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள்!

editor 2

நாட்டில் தொடருந்து கடவைகளில் ஏற்படும் பெரும்பாலான விபத்துகள், பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடிய தொடருந்து கடவைகளிலேயே இடம்பெறுவதாக, கோபா எனப்படும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது. 

தொடருந்து திணைக்கள அதிகாரிகள் அண்மையில் குறித்த குழுவின் முன்னிலை அழைக்கப்பட்டபோது இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளனர். 

அதேநேரம், நாட்டில் சுமார் 1,200 பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள் இருப்பதாகத் தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

Share This Article