யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்படவுள்ள எந்தவொரு உள்ளூராட்சி சபைகளுக்கும் தமது கட்சி இடையூறாக இருக்காது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த காலத்தில் தமக்கு எதிராகச் செயற்பட்ட எந்தவொரு அணியினருடனும் தாம் இணையப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை தொடருந்து நிலையத்தில் – பொதிகள் போக்குவரத்து சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சி இன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்திக்கு எதிராகச் செயற்பட்ட அனைவரும் இன்று ஆதரவாகச் செயற்பட்டு வருவதாகவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.