ஜனாதிபதி பொதுமன்னிப்பை முறைகேடான வகையில் பயன்படுத்தி சில சிறைக்கைதிகளை விடுவித்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த முறைகேடான செயற்பாட்டுடன் தொடர்புடைய சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட அதனுடன் தொடர்புடைய சகல உத்தியோகத்தர்களுக்கும் எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
ஜனாதிபதி பொது மன்னிப்பை முறைகேடாகப் பயன்படுத்தி கடந்த விசாக பூரணை தினத்தின் போது சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திடம் நீண்ட விசாரணை முன்னெடுத்து, வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.