வேட்பாளர்கள் 39 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்!

வேட்பாளர்கள் 39 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்!

editor 2

2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை வேட்பாளர்கள் 39 பேர் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

இன்று காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணிவரையில் இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 

இதேவேளை, இன்றைய தினம் இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தை அண்மித்த பகுதிகள் விசேட பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Share This Article