விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் விநாயகம் காலமானார்!

விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் விநாயகம் காலமானார்!

Editor 1

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் முக்கியஸ்தர்களில் ஒருவரான விநாயகம் என்று அறியப்பட்ட கதிர்காம சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி (வயது 60) நேற்று செவ்வாய்க்கிழமை புலம்பெயர் நாடொன்றில் காலமானார் என்று தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் – தென்மராட்சி வரணியை சொந்த இடமாகக் கொண்ட இவர்,
புலம் பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த நிலையில் நுரையீரல் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார் என்று கூறப்படுகின்றது.

தமிழீழ விடுதலை புலிகள் முன்னெடுத்த பல தாக்குதல் நடவடிக்கைகளுக்கு இவர் புலனாய்வுக்கு தலைமை தாங்கியிருந்தார் என்றும் கட்டுநாயக்கா விமான படைத்தளம் மீதான தாக்குதலில் இவரின் பங்களிப்பும் இருந்தது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Share This Article