யாழின் மிகவும் பின்தங்கிய கிராமத்து மாணவி மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதித்தார்!

யாழின் மிகவும் பின்தங்கிய கிராமத்து மாணவி மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதித்தார்!

Editor 1

யாழ்ப்பாணத்தில் இன்றவும் பின்தங்கிய நிலையில் காணப்படும் கிராமங்களில் ஒன்றான சில்லாலையின் சாந்தைக் கிராமத்தினைச் சேர்ந்த மாணவி ஒருவர் யாழ்.மாவட்டத்தில் கலைப்பிரிவில் உயர்தரத்தில் தோற்றிய மாணவர்களில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

பண்டத்தரிப்பு பெண்கள் பாடசாலையில் கல்விகற்றிருந்த அவர், கலைப்பிரிவில் தோற்றி பரீட்சையில் 3 ஏ சித்திகளைப் பெற்று யாழ்.மாவட்டத்திலேயே முதலிடம் பெற்றுள்ளார்.

மாணவி முதலிடம் பெற்று சாதித்த நிலையில் அவரது வெற்றியைக் கொண்டாடுவதற்காக கிராமத்து மக்கள் பெருமளவில் அவருடைய வீட்டில் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article