யாழ்.மாவட்டத்தில் கணிதப்பிரிவில் வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவன் முதலிடம்!

யாழ்.மாவட்டத்தில் கணிதப்பிரிவில் வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவன் முதலிடம்!

Editor 1

க. பொ. த. உயர்தரப் பரீட்சையின் கணித பிரிவில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவன் மதியழகன் டினோஜன் யாழ். மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான க. பொ. த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகின.

இதில், மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவனான மதியழகன் டினோஜன் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ தேர்ச்சி பெற்று மாவட்ட ரீதியில்
முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார்.

இதேவேளை, இரண்டாம் இடத்தை வேம்படி மகளிர் கல்லூரி மாணவி ஒருவரும், மூன்றாம் இடத்தை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் பத்மலிங்கம்
ஆதித்தியன் ஆகியோரும் பெற்றனர்.

Share This Article