உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் படுகாயம் அடைந்த பெண் 5 ஆண்டுகளின் பின்னர் மரணம்!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் படுகாயம் அடைந்த பெண் 5 ஆண்டுகளின் பின்னர் மரணம்!

Editor 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் படுகாயமடைந்து கடந்து 5 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.

திலின ஹர்ஷனி என்ற பெண்ணே நேற்று முன்தினம் இரவு இவ்வாறு உயிரிழந்தார். அவர், சிறீ ஜெயவர்த்தனபுர மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட பின்னரே உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் படுகாயமடைந்திருந்தார். இந்தத் தாக்குதலில் இவரின் மகன் துலோத் அந்தோனி என்பவர் உயிரிழந்தார்.

முன்னதாக, உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் 8 இடங்களில் தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தாக்கு தலில் 257 பேர் கொல்லப்பட்டனர். 500 இற்கும் மேற்பட்டோர் காயங்களுக்கு
உள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது

Share This Article