அரசியல் தீர்வு அவசரமில்லை – சிவிவியிடம் ஜனாதிபதி தெரிவித்தாராம்!

அரசியல் தீர்வு அவசரமில்லை - சிவிவியிடம் ஜனாதிபதி தெரிவித்தாராம்!

Editor 1

வடக்கு – கிழக்கில் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதுதான் இப்போது முக்கியம். அரசியல் தீர்வு இப்போது அவசரமில்லை. இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் சீ.வீ.விக்னேஸ்வரனிம் நேற்று நேரில் குறிப்பிட்டார்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

நேற்று பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனை வீடு தேடிச் சென்று
சந்தித்தார் ஜனாதிபதி ரணில். இதன் போது நடந்த பேச்சில், வடக்கு, கிழக்கில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதுதான் அரசின் முக்கியமான வேலை. அதுவே முதலில் செய்ய வேண்டியது. அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்பில் இப்போது அவசரம் காட்ட வேண்டியதில்லை. அதனைப் பிறகு பார்க்கலாம் என்ற தொனியில் ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்தார் என்று விக்னேஸ்வரன் எம்.பி. குறிப்பிட்டார்.

Share This Article