ஜனாதிபதி வருகை; கிளிநொச்சியில் போராட்டங்களுக்குத் தடை!

ஜனாதிபதி வருகை; கிளிநொச்சியில் போராட்டங்களுக்குத் தடை!

Editor 1

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்படவிருந்த போராட்டங்களுக்கு நீதிமன்றத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் சார்பில் கதிர்காமநாதன் கோகிலவாணி இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

இன்று (நேற்று) கிளிநொச்சிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்றை நிகழ்த்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்தப் போராட்டத்துக்கு நீதிமன்ற தடைஉத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

எமது பிள்ளைகளை யுத்த காலத்தில் இராணுவத்திடம் கையால் ஒப்படைத்தும் விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டு இன்றுவரை எமக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை.

எத்தனையோ போராட்டங்கள் வாயிலாக ஊடகங்கள் வாயிலாக தெரிவித்தும் இதுவரை எமக்கான நீதிகிடைக்கவில்லை.

கடந்த யுத்த காலங்களில் உண்ண உணவின்றி உப்பு கஞ்சி குடித்து உயிரைக் காத்து கொண்டோம்.அதனை சர்வதேசத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எடுத்து காட்டும் முகமாக மே18 முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டுவந்தது.

குறித்த நினைவுக் கஞ்சிகளை இராணுவம் மற்றும் பொலிஸார் காலால் தட்டி சுகாதார கேடு எனப் பலரை கைது செய்துமுள்ளனர்.

ஆனால் இன்று நாடு பூராகவும் வெசாக் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் இதுவரை எந்த குழப்பங்களும் இல்லாமல் நடத்துகின்றனர்.

அப்படி என்றால் தமிழருக்கு ஒரு சட்டம் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமா
என கேள்விகள் எழுந்துள்ளன. இந்த காரணங்களுக்காகவே ஜனாதிபதியின்
வருகையை இன்று எதிர்த்து சர்வதேச நாடுகளுக்கு உணர்த்தும் வகையில் ஊடகங்கள் வாயிலாக இதனைச் சுட்டிக்காட்டுகின்றோம் – என்றார்.

Share This Article