யாழில் தந்தைக்கும் மாமனுக்கும் இடையில் மோதல்! தடுக்கச் சென்ற இளைஞர் பலி!

யாழில் தந்தைக்கும் மாமனுக்கும் இடையில் மோதல்! தடுக்கச் சென்ற இளைஞர் பலி!

Editor 1

யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சைப் பெற்று வந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாவடி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2ஆம் திகதி குறித்த இளைஞரின் தந்தைக்கும், அவரது சகோதரியின் கணவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

மோதல் கைகலப்பாக மாறிய போது அதனைத் தடுப்பதற்காக சென்ற குறித்த இளைஞர் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்ததை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதன்போது அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article