திருமலை கடலில் மீனவர்கள் இருவரைக் காணவில்லை!

திருமலை கடலில் மீனவர்கள் இருவரைக் காணவில்லை!

Editor 1

திருகோணமலை மாவட்டத்தின் சல்லி கடல் பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற
மீனவர்கள் இருவரைக் காணவில்லை என மீனவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை 20ஆம் திகதி சல்லி பிரதேசத்தில் இருந்து முற்பகல் 10 மணி
யளவில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவர் கடல் நடுவே காணாமற்போயுள்ளதாகக் கூறப்படுகிறது.

வட்டாரம் 2 சல்லி பிரதேசத்தைச் சேர்ந்த குட்டிராசா சசிக்குமார் (வயது 45), முருகையா சுஜந்தன் (வயது 22) ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளனர்.

இவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

காணாமற்போன மீனவர்களை தேடி சல்லி பிரதேசத்தைச் சேர்ந்த பத்துக்கும்‍ மேற்பட்ட மீனவர்கள் சென்றுள்ள நிலையில், இது தொடர்பில் கடற்படைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மீனவர்களின் உறவினர்கள் கூறினர்.

Share This Article