கிராம உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிப்பு!

கிராம உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிப்பு!

Editor 1

நாட்டில் கிராம உத்தியோகத்தர்கள் 13 ஆயிரம் பேரின் சம்பளம் மற்றும்
கொடுப்பனவுகளை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, இலங்கை கிராம சேவையாளர் சேவையை ஸ்தாபிப்பதற்காக, சேவைக்கான அரசியலமைப்பு வரைவு அரச சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி புதிய கிராம அலுவலரின் அடிப்படைச் சம்பளம் 28,940 ரூபாய் முதல் 30,140 ரூபாயாக உயரும் என்றும் கிராம அலுவலர் சேவையில் தரம் 2 அதிகாரியின் அடிப்படைச் சம்பளம் 33,690 ரூபாவாகவும் தரம் 3 அதிகாரியின் அடிப்படைச் சம்பளம் 38,590 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article