யாழில் வாள்வெட்டு! பொலிஸ் உத்தியோகத்தரே மேற்கொண்டதாக குற்றச்சாட்டு!

யாழில் வாள்வெட்டு! பொலிஸ் உத்தியோகத்தரே மேற்கொண்டதாக குற்றச்சாட்டு!

Editor 1

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நடத்தினார் என்று கூறப்படும் வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.

தொல்புரம் மத்தியில் நேற்று முன்தினம் இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில், அதே இடத்தைச் சேர்ந்த பானுஜன், ஜனார்த்தனன் ஆகியோரே காயமடைந்து யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தனிப்பட்ட முரண்பாடே இந்த வாள்வெட்டுக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.

இந்த வாள்வெட்டை நடத்தியவர் காங்கேசன்துறை பொலிஸின் சிறப்பு பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் என்று கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article