அமெரிக்காவின் கோரிக்கையை நிறைவேற்றியிருந்தால் தமிழீழம் உருவாகியிருக்கும் என்கிறார் வீரவன்ச!

அமெரிக்காவின் கோரிக்கையை நிறைவேற்றியிருந்தால் தமிழீழம் உருவாகியிருக்கும் என்கிறார் வீரவன்ச!

Editor 1

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அமெரிக்கா கோரியபடி கையளித்திருந்தால் இலங்கையில் தமிழீழம் உருவாகியிருக்கும் – இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று புதன்கிழமை உரையாற்றிய அவர், ‘இலங்கை படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடியாமல்
போயிருந்தால், தெற்காசியாவின் இஸ்ரேலாக தமிழீழம் உருவாக்கப்பட்டிருக்கும்.

இன்று இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் காசா பிரதேசத்தை போன்று சிங்களவர்கள் வாழும் பிரதேசம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்.

2009இல் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தம்மிடம் கையளிக்குமாறு அமெரிக்கா கோரியிருந்தது. இதற்காக அமெரிக்கா கப்பலையும் அனுப்பியது. மேலும், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் பிரபாகரனை தம்மிடம் கையளிக்குமாறு கோரியிருந்தன. எனினும், அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை’ என்றார்.

Share This Article