சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மீள்பரிசீலனை முடிவுகள் 2 வாரங்களுக்குள் வெளியாகும்!

சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மீள்பரிசீலனை முடிவுகள் 2 வாரங்களுக்குள் வெளியாகும்!

Editor 1

க. பொ. த. சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மீள்பரிசீலனை முடிவுகள் இரு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் காமினி வலே பொட எம். பிக்கு பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் பரீட்சை பெறுபேறுகள்மீதான மீள்பரிசீலனை முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். க. பொ. த. உயர்தரத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில் அந்த மாணவர்கள் இதன் மூலம் பெரும் அசௌரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், வழமையாக உள்ளதை விட இம்முறை சாதாரணதர பரீட்சை விடைத்தாள் மீள்பரிசீலனைக்காக இரண்டு மடங்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பான நடவடிக்கைகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.

அடுத்த மாத முற்பகுதியில் அதனை வெளியிட முடியும்.

மே இரண்டாவது வாரத்தில் சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளது. இதற்கு முன்னதாக மீள்பரி சீலனை பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் எனக்கு அறிவித்துள்ளார் – என்றும் கூறினார்.

Share This Article