மத்தள விமான நிலையம் ரஷ்ய, இந்திய நிறுவனங்கள் வசம்!

மத்தள விமான நிலையம் ரஷ்ய, இந்திய நிறுவனங்கள் வசம்!

Editor 1

மத்தள விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

30 வருட காலத்துக்கு ரஷ்யா – இந்திய கூட்டு முயற்சிக்கு ஒப்படைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

இந்தியாவின் சௌர்யா ஏரோநோட்டிக்ஸ் ரஷ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ்
முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தள விமான நிலையத்தின் நிர்வாகத்தை ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது.

Share This Article