பதவி துறக்கிறார் மைத்திரி?

பதவி துறக்கிறார் மைத்திரி?

Editor 1

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்யத் தயாராகி வருகிறார் என்று கூறப்படுகிறது.

தற்போது நீதிமன்றத்தின் தடை உத்தரவுக்கு உள்ளாகியுள்ள சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகுவார் என்றும் அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் யாப்பின் பிரகாரம் தலைவர் பதவியில் இருந்து விலகும் தலைவர்
கட்சியின் போஷகர் பதவிக்கு நியமிக்கப்படுவார்.

தற்போது கட்சியில் கடும் கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், இரு பிரிவினரும் இரண்டு பதில் தலைவர்களின் பெயர்களைக் கூறி தேர்தல்
ஆணையத்திடம் கடிதம் கையளித்துள்ளனர்.

இந்த நியமனங்களுக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த பலரும் தேர்தல்
ஆணையத்திடம் முறைப்பாடு அளித்துள்ளனர்.

Share This Article