Tiktok வீடியோவிற்காக மட்டக்களப்பில் உயிரிழந்த இளைஞர்கள் இருவர்!

editor 2

Tiktok வீடியோவிற்காக கடலில் பயணித்த இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு சீலாமுனை பகுதியில் இருந்து நாவலடி பிரதேசத்திற்கு மட்டுவாவி ஊடாக 6 பேர் பயணித்த தோணி வாவியில் கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன் 4 பேர் நீந்தி உயிர்தப்பிய சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (08) மாலையில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

மட்டு சீலாமுனையைச் சேர்ந்த 19 வயதுடைய தவசீலன் கிருசாந்தன், மாமாங்கத்தைச் சேர்ந்த 18 வயதுடைய பிரபாகரன் பிருந்தயன் ஆகிய இருவருமே சடலங்களாக மீட்கப்பட்டனர்.

மட்டு தலைமையக பொலிஸ் பிரிவு சீலாமுனை மாமாங்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 6 பேர் Tiktok வீடியோ தரவேற்றம் செய்வதற்காக சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் சீலாமுனையில் இருந்து தோணியில் வாவியில் பயணித்து நாவலடிக்கு சென்று அங்கு வீடியோ மற்றும் புகைப்படங்களை டிக்டொக்கிற்கு எடுத்துவிட்டு மீண்டும் சீலாமுனைக்கு தோணியில் பயணித்த போது தோணியின் கட்டப்பட குள்ளாதடி இரண்டாக உடைந்ததையடுத்து தோணி வாவியில் கவிந்ததையடுத்து அனைவரும் நீரில் முழ்கினர்.

இதனையடுத்து 4 பேர் நீந்திக்கரைசேர்ந்த நிலையில், இருவர் காணாமல் போயிருந்ததையடுத்து மீனவர்களின் உதவியுடன் அவர்களை தேடியநிலையில் நாவலடிபகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மற்றும் காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Share This Article