அனுமதி வழங்கப்படாத 08 மோட்டார் சைக்கிள்கள் திருமலையில் சிக்கின!

editor 2

அதிவேகமாகப் பயணிக்கக்கூடிய 08 மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞர்கள் எண்மர் திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல்தீவு பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (08)இடம் பெற்றது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

போட்டிக்காக அவை கொண்டுவரப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அவற்றில் ஆறு மோட்டார் சைக்கிள்கள் இலங்கையின் வீதிகளில் பயணிப்பதற்கான அனுமதி இல்லாதவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்பதும் தடை செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் எனவும் தெரியவருகிறது.

குறித்த கைது செய்யப்பட்ட இளைஞர்கள் சுமார் 20 தொடக்கம் 25 வயதுடைய மீகமுவ மற்றும் அதனை அண்டிய பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர்களை உரிய மோட்டார் சைக்கிளுடன் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share This Article