வவுனியா – கன்னாட்டி கணேசபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.
நேற்று முன் தினம் இரவு அவரின் வீட்டிலிருந்து அருகில் உள்ள கடைக்குச் சென்ற
போது வீதிக்கரையில் நின்ற காட்டு யானை அவரை தாக்கிதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் கன்னாட்டி – கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 63 வயதான சுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை பறையனாளங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.